11.18.2011

கிரிக்கெட்டும் வாழ்க்கையும் தத்துவம்

 


 கிரிக்கெட்  இன்று பெரும்பாலான இந்தியர்களின் தேசிய கீதமாகவே இருக்கிறது. அதுவும் நம் இந்திய அணியினர் இந்த வருடம் உலக கோப்பையை வென்றதில் இருந்து இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டை வெறுப்பவர்கள் இந்தியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை முட்டாள்கள் தான் பார்ப்பார்கள், இன்னும் பல வகையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும். இன்று பணம் கொழிக்கும் தொழிலாகவே உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.

11.17.2011

என் உயிர் நாதம்


நீ கேட்பதற்காகவே வைத்த என்

அலைப்பேசியின் ஒலி நாதத்தை

உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்…

11.16.2011

விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது


 
விதைகளை விற்று
விறகுகள் வாங்குகிறோம்
சதைகளை வளர்க்க
எலும்பினைத் தேய்கிறோம்
விலையினைக் கொடுத்தா
ஞானம் வாங்குவது
மலரனில் தேய்தா
முற்களைக் கூராக்குவது

11.15.2011

அம்மா உனக்குத் தெரியுமா?

அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும்
அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன்

நொடிக் கொரு முறை என் சலனத்தை

நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன்

11.14.2011

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)

 
நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
நான் உனக்கு முதன் முதலில்
வாங்கித் தந்த பேனாவை நீ
எழுதுகிறதா என பரிசோதிக்க
ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
தெரிகிறது







வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (1)

 

அகரத்தை முதலாக உடையது
எழுத்து
அன்பே உன் விரல்களின்
கிறுக்கல்களை முதலாக உடையது
என் காதல்.....

 வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

11.13.2011

கூடங்குளமும் கல்லணையும் அப்துல் கலாம்

 

அழும் குழந்தைக்கு சாக்லெட் கொடுக்கும் கதை. கூடங்குளத்தில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தை இப்படித் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

Popular Posts