12.18.2007

என்னை மீட்டுக்கொடு

என்னை மீட்டுக்கொடு!















உன் துப்பட்டாவால் நான் விழுந்தேன்
அன்பே என்னை தூக்கி விடு!
உன் இருவிழி பார்வையில் எனை மறந்தேன்
அன்பே என்னை மீட்டுக்கொடு!
ஓருயிர் தானே எனக்குள் இருப்பது
இருயிர் சுமக்க இதயத்தில் இடமெது
கருவினில் கூட இருயிர் தோன்றும்
என் இதயத்தில் என்றுமே ஓருயிர் தான்
அதுவும் என்றும் உன்னிடம் தான்




உன் கண் இமைக்குதே
எனை சிறை வைக்குதே
உன் இதழ் திறக்குதே
அது கவி படைக்குதே
நீயும் புன்னகைக்கையில்
என்னுயிர் மறுப்பிறப்பெடுக்குதே.............








காதல் சுடுமோ! கண்ணீர் வருமோ!
கனவும் நினைவும் கவலையை தருமோ!
மறதியும் மனதில் மறைவின்றி எழுமோ!
முற்களின் வலியை பூக்கள் தருமோ!
சொற்களும் சுமையாய் நெஞ்சினில் விழுமோ!
என்னவளே!
அடி என்னவளே!
ஒரு சொல் சொன்னாய் என் நெஞ்சுள்ளே........
வாழ்ந்தது போதும் என்று நினைப்பது போல்........








என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்.................
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!



12.17.2007

உண்மையடி நீ எனக்கு


ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னை பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!


அழைத்து செல்வாயா ?
வேகமேடுக்கும் உன்
விழிகளின் பார்வையில்
என் நினைவுகளையும்
சேர்த்து அழைத்து செல்வாயா?
உன் உள்ளத்தில் பயனியாக
வர அனுமதி கேட்கிறேன்
பாலைவனத்தில் தனியாக சிக்கி
தவிக்கும் நான்
வழியுமின்றி விழியுமின்றி
கிடக்கிறேன்
அழைத்து செல்வாயா ?
உன் நீண்டநேசப் பயணத்தில்.......................



என்னுயிர் நின்று விடும்

உன் உள்ளத்துப் பயணியாக
வந்த என்னிடமே செல்ல
வழி கேட்கிறாயே பெண்ணே!
எங்கேயாவது செல்................
பயணத்தை நிறுத்தி மட்டும்
விடாதேஎன்னுயிர் நின்று விடும்.........



அதிசயம் தானே நான்..

சாவையருகில் பார்த்ததாக பலர்
சொல்லியிருக்கிறார்கள்
நானோ சாவையே பார்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ உள்ளே வந்தாயே அந்நொடியே
என்னுயிர் பிரிந்து விட்டது
இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பெண்ணே ! அதிசயம் தானே நான்.....................

12.13.2007

அம்மா! அம்மா! அம்மா!


ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்த குரலில் கலந்து வரும்
உரிமையை உணர் வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை
உன் விரல் பட்ட உணவில்
தான் நான் உயிர் வளர்த்தேன்
உன் இதழ் சிந்திய வார்த்தையை
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
உன் சுவாசத்தில் கலந்த காற்றை
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்
முதல் நடந்திடும் நான்
விழுந்தது உன் மடியில்
முதல் மொழியினை நான்
உணர்ந்தது உன் இதழில்
முதல் கலங்கிடும் விழிகளை
துடைத்தது உன் உடையில்
முதல் சிரிப்பினை பழகியது
உன் முகத்தில்
கண்ணாடிப் பார்க்கும் வரை
என் அத்தனை முகங்களும் நீயே
உன் முன்னாடி இருப்பதை விட
வேறு இன்பமில்லை தாயே
என் நிர்வானத்தை முதலில்
களைத்த நீயே
நீல வானத்தையும் காட்டி
வளர்த்தாய் தாயே
மூச்சு விடும் இடைவெளியிலும்
உன் அன்பு எனை
விட்டு விலகியதில்லை
நீ காட்டி வளர்த்த
ஒவ்வொரு பொருளும்
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
கையெடுத்து நீ கும்பிடச்
சொன்ன தெய்வமோ
எனக்கு தலை சீவிவிட்டதில்லை
நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
கூட நீ எனை அடித்ததில்லையே
குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
அடி வாங்கஅடம் பிடிப்பேன்
உன்னிடம் அடி வாங்காமல்
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
என்பேன்
கிறுக்கித் தான் அம்மா
உன் கைகளை பிடித்து
எழுத துவங்கினேன்
அன்பை சுருக்கி வாழும்
இதயங்களின் நடுவே
உறவுகளை பெருக்கி வாழும்
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
அணுஅணுவாய் என் வளர்ச்சியை
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
என்றைக்கும் உன் சேலை நுனி தான்
என்னுடைய கை குட்டை
உன் முகமே நான் முகம் பார்த்து
தலை சீவும் கண்ணாடி
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
நான் விரும்புகிறேன் தாயே
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம்
எனக்கு தெரியாமல் நீ
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
அந்த சுகம் இன்று எந்த
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
உன் விரல் நுனியின் சுவையை
எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகத்தை எந்த
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை




அம்மா !உன் நினைவுகள்





உன் நினைவுகள் படாத
ஒரு பொருளை வீட்டில்
என்னால் காட்ட முடியாது அம்மா!
நீ கட்டிய சேலை
என் தலையணையாக மாறியது.
நீ என் கையைப் பிடித்து
கற்றுத் தந்த மொழிகள்
இன்று கவிதைப் படைக்கிறது
நீ முதன்முதலில் வாங்கிய
உப்புக்கான டப்பாவைப் பார்க்கையில்
உன் கைகளின் சுவை
இன்றும் நாவில் நிற்கிறது
நீ சொல்லித் தந்தபடி
நான் விதைத்த கத்திரி
இன்று நம் வீட்டுக் குழம்பில்
கமகமக்கிறது.
இப்படி வீட்டில்
நீ கட்டிய பந்தலில்
வளர்ந்த அவரக்காய்,மல்லிப் பூ.
வளருமா? என்று நினைத்த வாழைமரம்
என எல்லாவற்றையும் நம்
வீட்டிற்கு வருபவர்களிடம்
நான் காட்டுகிறேன்.

உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்
இதோ என் அம்மாவென்று
உன் புகைப்படத்தைக்
காட்டவைத்துச் சென்று விட்டாயே!
அம்மா !

11.29.2007

கவிதை! இன்பக்கவிதை!

கவிதை எழுத வருமா !
என் மனது முழு அமைதி
இன்று பெருமா!
சோர்வில் மிதந்து கிடக்கும்
என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா!
காற்று சுகமிருந்தால் உள்ளே
சுவாசத் தடங்களிருக்கு
சுவாசம் ஒழுங்கடைந்தால்
வெளியே காற்று அடங்கி இருக்கு
மலர்ந்த கனவுக்கெல்லாம் என்
மனம் வாடகை கேட்டிருக்கு
இன்று மனமே வாடகையாய்
கனவில் புழூங்கியிருக்கு..........
தூக்கம் எனக்கிருந்தால்
இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை
ஏட்டில் கிறுக்குவதால் என்மனம்
தூக்கம் கொண்டதில்லை
துக்கம் எனக்கிருந்தால் அதை
ஏட்டில் இறக்கியிருப்பேன்
மன வாட்டம் போக்கியிருப்பேன்
விழி தூக்கம் கொண்டிருப்பேன்
துக்கமில்லை தூக்கமில்லை
எதுவுமின்றி நான் சோர்ந்து கிடக்கிறேன்
நெஞ்சம் வேர்த்துக் கிடக்கிறேன்
கண்ணீர் கோர்த்து கிடக்கிறேன்
கவிதையில் பூத்துக் கிடக்கிறேன்
சோற்று பருக்கைத்தனை வாயில்
போட்டுக் கொண்டப் பொழுது
உழவன் வாட்டம் என் மனதில்
தாக்கம் கொள்கிறதே
வாழ்வு முழுவதிலும்
மன புழுக்கம் எதுவுமின்றி
வாழ நினைக்கையில்
வருத்தம் வாசல் முன் வருதே
தேடி திரிகையில் அன்பே
முதலென முடிவும் தெரியுதே
காத்துக் கிடக்கிறேன் அன்பினை
சுவாசம் நுழைக்ககவே!
அதில் இன்பம் தெரியவே
ஏட்டில் கிறுக்கல் நிறையுதே
சொல்ல நினைத்ததை ஏட்டில்
கிறுக்கிப் பார்க்கிறேன்
சோர்வு எனக்கிருந்தால் அதனுடனே
கொட்டித் தீர்க்கிறேன்--
நிறைவில் வருவதையே கவிதை !
இன்பக்கவிதை!என்கிறேன்.......

10.30.2007

எதார்த்தத்தின் நிழலில்




இன்றும் நான் பேருந்தில் தான்
பயணம் செய்து கொண்டிருக்கிறேன்
நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......

உன்னுடைய விமானப் பயணம்
எப்படி இருந்த தென்று
நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள்
என்னைத் தவிர....... .

என்னுடைய விசாரிப்பை
நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய்
என்பதை நானறிவேன்
நம்முடைய வாழ்க்கை தான்
எவ்வளவு சீக்கிரத்தில்
எதார்த்தத்தின் நிழலில்
சரணடைந்து விட்டது.........

என்னுடைய டைரியில்
உனது பெயர் இடம்பெறுவது
அரிதாகிவிட்டது
உனது நினைவை எப்பொழுதாவது
ஒரு முறைத் தூண்டும்
கனவு கூட இப்பொழுதெல்லாம்
வருவதில்லை
நான் உறங்குவதே இல்லையென்பதால்....

எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா!
உன்னை மறந்ததில் எனக்கு...
பெருமிதமாக்த் தான் இருந்தேன்
உன் குரலை அலைப் பேசியில்
கேட்கும் வரை......

எப்படி இருக்கிறாய்?
என உன் குரல்
ஒலிக்கையில்.....
நலமென்று சொல்ல மட்டும்
பொய்யெனக்கு வரவில்லை

ஆனால் நீ மட்டும் சொன்னாய்.......

10.23.2007

ஒரு முத்தம் கேட்டேன்


உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்..............
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்...................
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்..............

10.22.2007

இது போதும்!


முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் -- என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்--உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?
ஆனால் வீட்டினுள் நீ நுழைந்ததும்
உன் பார்வையில் அது
எந்த மாற்றத்தையும் செய்யவில்லை
என்பதில் ஏமாற்றம் தான் எனக்குள்
அந்த மாற்றத்தையும் நீ
கவனித்துவிட்டாய் நொடியில்..............
என்னவென்ற உன் பார்வைக்கு
என்ன சொல்வது நான்......
நீ உள்ளே வந்ததும் தான்
வீடு பிரகாசமடைந்து
குறைகள் கண்ணுக்குத் தெரிகிறத்தென்றேன்
மின்னலாய் ஒரு ஒளி
உன் சிரிப்பில் வீடு மேலும்
பிரகாசமடைந்தது................
சிரிக்காதே ! எங்கள் வீட்டில்
இப்பொழுதுதான் புதிதாக
டீவீ வாங்கியிருக்கிறோம்
உன் சிரிப்பு மின்னலைஅது தாங்காது!
என்றேன்.
உன் முகம் அந்நொடி சிவந்ததில்
நடுவெயிலில் செவ்வானத்தை
பார்த்தேன் நான்................
எனை சுட்டெறிப்பது போல்
பார்த்தாய் நீ.......................
வேண்டாம்! இது வாடகை வீடு
பற்றிக் கொள்ளப் போகிறத்தென்றேன்.............
கோபமாக 'நான் என்னத் தான் செய்ய?'
என்றாய்..........
'சமையல் செய்யேன்' என்றதும்
'ப்ளுக்' கென்று உன்னையறியாமல்
மீண்டும் சிரித்தாய்..................
அய்யோ! சிரித்துவிட்டேன்
என்று பரிதாபமாக என்னைப் பார்த்தாய்
நிறுத்தாதே! 'சீரி' என்றேன்
உங்கள் வீட்டுப் புது டீவீ?
கிண்டலாய் கேட்டாய் நீ
உன் சிரிப்புக்காக எத்தனை
டீவீ யை வேண்டுமானாலும்
இழக்கலாமென்றேன்
உனதுவிழிகள் என்னை
நேருக்கு நேர் சந்திக்க முடியாமல்
நாலாப் பக்கமும் அலைந்தன...........
என்னப் பேசுவது என்றுப் புரியாமல்
உனது உதடுகள் துடித்தன
திடீரென பேச்சை மாற்ற
'வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறது'
என்றாய்.......
உனக்காக நானும் வெளியில்
சென்றுப் பார்த்து விட்டு வந்தேன்
என்ன? என்ன சத்தம் யார் ?
என்றாய்
அண்டை வீட்டார் தான்
வீட்டிற்குள் எப்பொழுது
பூக்கள் வளர்க்க ஆரம்பித்தீர்கள்
என்று கேட்கிறார்கள்..........
ஏன்? ஏன் அப்படி கேட்கிறார்கள்
என்று ஒன்றும் அறியாதவள்
போல் அப்பாவியாய் கேட்டாய் நீ........
எல்லாம் நீ வந்ததால் தானென்று
அவர்களிடம் எப்படி என்னால்
சொல்ல முடியுமென்றேன்
உன் முகத்தில் தான்
எவ்வளவு பிரகாசம்
நொடியில் எங்கள் விட்டுப்பூக்களையெல்லாம்
தலைகுனிய வைத்துவிட்டாய்
உன் நாணத்தால் எங்கள் வீட்டிற்கு
புது சாயம் பூசி விட்டாய்
மொத்தத்தில் எங்கள் வீடு
புதியதாகியது உன் வரவால்
இது போதும்! என்று நான் சொன்னதும்
நீயும் இது போதும்! என்றாய் பதிலுக்கு................

10.19.2007

அன்பை பற்றிடடா!



நாலு பேரின் நடிப்பிலே
நாடக மேறியது மேடையில்
இன்று நாலாப் பக்கமும் நடிப்பிலே
மேடையின்றி நாடகமே
முறையோடு வாழ்பவர்க்கு
முதுகுக்கு பின்னே கண் வேண்டாம்
குறையை முறையாக்கி க் கொள்பவர்க்கு
கால் பாதத்திலும் கண் வேண்டும்
சாக்கடையும் சந்தன சாயம் பூசி
சமுதாய வீதியில் வலம் வரவே
வேசித் தொழிலும் நாசமாகும்
இந்த வீண் கெட்ட நாட்டினிலே
தாயும், தந்தையும் ரெண்டாகவே
தாரங்கள் மகனின் மனதினிலே
இந்த கோரங்கள் இங்கு நிலைத்திடவே
பதிகள் கோர்ட்டின் வாசலிலே
போலிகள் நிறைந்த சமூகத்திலே
புன்னகை பொலிவு கடை வீதியிலே
தாலிகள் சேலையின் மறைவினிலே
சில வேசியும் பத்தினி வடிவினிலே
தோழிகள் தொட்டில் சுமக்கையிலே
கட்டின மனைவி மலடியாய் வீட்டினிலே
பாவிகள் காவிகள் போர்வையிலே
பரம்பொருளும் பாவியாய் வீதியிலே
பெண்மையின் சாரம் நகைக்கையிலே
பொம்மையும் தாய்மை அடையுதடா!
ஆண்மை வேடம் தரிக்கையிலே
இயந்திரம் தந்தை ஆனதடா!
தூக்க மாத்திரை உண்டிடவே
உனக்கு வாழ்க்கை தேவையா என்னிடடா!
சொர்க்கம் ஒன்று உண்டென்றால்
புவி வாழ்வில் அன்பை பற்றிடடா!

10.18.2007

பேசாத விட்ட நொடிகள்


பேசுவோம் பேசுவோமென்று நாம்
பேசாத விட்ட நொடிகள் தான்
நம் நட்பை இன்றும் பேசுகிறது.....
சிரிப்போமென்று தெரியாமல்
சிரித்த கணங்கள் தான்
நெஞ்சில் இன்றும்
பசுமையாக நிற்கிறது................
கவிதையாய் நினைவுகளும்
புதினமாய் நிகழ்வுகளும்
ஓவியமாய் சந்திப்புகளும்
புதைந்திருக்கும் நெஞ்சுக்குள்
எப்பொழுதாவது நிகழும் சந்திப்பு
நமக்குள்ளிருக்கும் நினைவுகளை
விழிக்கச் செய்யுமென்றால்
நம் நட்பின் அந்த நொடிகள்
லேசான ஈரத்துடனே பதிவாகும்
நெஞ்சுக்குள் ஆழமாய்.............................

10.17.2007

பொது மகளீர்.......................


இது வரை குப்பைத் தொட்டிக்கு
செல்லாத காகிதங்களால் ,நாங்கள்
குப்பையாகிறோம்

.......................................................................................


குப்பைத் தொட்டிக்கு
சென்ற பின்னும்
மீண்டும் பூஜைக்கு வரும்
மலர்கள் நாங்கள்

.........................................................................................


வெற்றுக் காகிதங்கள் நாங்கள்
இது வரை எங்களின் மேல்
எந்த ஓவியமும் வரையப்படவில்லை
எந்த கவிதையும் எழுதப்படவில்லை
கிறுக்களுக்கும் கிழிசலுக்குமே
எங்களின் சதைகள் தேவைப்படுகின்றன
வெற்றுக் காகிதங்கள் நாங்கள் .................................

10.16.2007

நினைவெனும் மெல்லியநூலிழை


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும் மெல்லியநூலிழையால்
பிணைக்கப்பட்டிருக்கிறது
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை................
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்
சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
உனது நேசங்க்களின் தொகுப்புக்கு
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே!
தயவு செய்து பேசிவிடு!
என் சுவாசத்தினுள் உனது
நேசக் காற்றினை வரவேற்க
காத்திருக்கிறேன்......
உனது வார்த்தைகளில் சில
என்னை கோபப்படுத்தியதுண்டு
அப்பொழுதெல்லாம் எனது
கோபத்தை ரசிப்பதற்க்காகவே
பேசினேன் என்பாயே.....
இப்பொழுது என் காதலை
ரசிக்க கொஞ்சம் பேசேன்!
நான் நிச்சயம் கோபம்கொள்ள மாட்டேன்

உனக்கு ஒரு கும்பிடு

தலைவணங்குகிறது

கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................



அனுமதிப்பதில்லை


கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................




என்னைப் பார்த்து நீ......


துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது

10.12.2007

சிரிக்க நினைத்தேன்


வார்தைகளை எப்படி மனதிலிருந்து
தோண்டி எடுப்பது என்று நினைவுகள்
அடிக்கடி சோர்கின்றப் பொழுது தான்
சொற்களில் இதமில்லாமல் கடுமை
வெளிப்படுவது கண்டேன்......................
முற்களில் இதயம் மாட்டியது போல்
வலி எங்கே என்று தேடித்
திரிகையில் தான் மேனி
முழுதும் சோர்வைக் கண்டேன்.........
கண்ணீர் சீந்தவும் மனதின்
நினைவுகள் தூண்ட வேண்டும்என்று
கண்கள் கசக்கப் போராடும்
பொழுது உணரக் கண்டேன்.............
உதடுகளில் மலர்ச்சியை காண்பிக்க
உள்ளத்தில் எத்தனை
அழ வேண்டும் என்பதை
துவண்ட இதயத்தின்
சோகத்தில் கண்டேன்

10.09.2007

சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு

என் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி ,அவனுடைய நண்பனின் காதலுக்காக எழுதியது. ஒரு மாதம் அவன் சொன்ன தகவல்களில் இருந்து நான் எழுதிய முதல் காதல் கவிதை, ஆறு வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது அவர்களுக்குள் திருமணம் நிகழ்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களையும் சிறிது மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் இதோ காதலுடனான என் முதல் சந்திப்பு....................


கால மணித் துளிகளோடு
என் காதல் மழைத் துளிகளையும்
வீசும் தென்றல் காற்றினூடே- உலவ
விடுகிறேன் தூசி போலே
இதை மாசு போல் நினைத்து
உதறி விட முடியாது.....
உள்ளுக்குள் இருக்கும் நோயை
தும்மல் மூலம் வெளிக்காட்டிவிடுகிறது தூசி
அது போல் உள்ளத்தில்
உள்ள நோயைக் காதல் மூலம்
வெளிக்காட்டிவிடுகிறது கண்கள்
அதை உள்ளே அடக்குவது முறையோ!
அடக்குவதால் தான் என்ன பயனோ!
இந்த வெள்ளைத் தாளில்
என் சிந்தனைத்துளிகளை சிந்தவிட
ஏனோ என் மனம் விரும்புகிறது
இதை உள்ளத்தின் உளறல் என்று
நினைப்ப தினால் எனக்கொன்றும்
கவலையில்லை......
உள்ளத்தின் உளறல் என்றாலும்
உதடடளவில் இல்லாத
உறுதியான உச்சரிப்பு
மலையை உடைக்கவோ! நிலவைப் பிடிக்கவோ!
என் காதலுக்குத் தெரியாது
ஆனால் உள்ளத்தை உருக்க...........
உணர்வை எழுப்ப...........
அன்பைக் கொடுக்க...........
என் காதலுக்குத் தெரியும்
அந்த தாஜ்மஹாலின் உன்னத
உயிர்த் துடிப்பை உணர முடியும்
அந்த கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும்
காதல் நெஞ்சங்களை
எழுப்ப முடியும்...............
நேற்றைக்காகவோ! இன்றைக்காகவோ! நாளைக்காகவோ!
நான் வாழவில்லை..............
ஒரு மணித் துளி வாழ்ந்தாலும்
எனக்காக என் ஆத்மாவின்
ஆனந்தத்திற்காக வாழ்கிறேன்
என் ஆனந்தம் இந்த ரோஜாவின்
மெல்லிய இதழை விடவும்
துல்லியமானது....
எனக்கு கிடைத்த இந்த ஆனந்தம்
காதலால் வந்ததே...........
காலத்தின் மீது முற்களூக்கு
உள்ள காதலால் தானே
கடிகாரம் கூட மணித் துளிகளை
உதிர்க்கிறது
ரோஜாச் செடியில் முற்கள் என்று
நாம் கவலைப் பட்டாலும்
கடினமான அந்த நெஞ்சத்திலும்
எவ்வளவு மென்மையுள்ளது என்பதை
ரோஜாவின் புன்னகையே விளம்பரப்படுகிறதே....
ஆம் நீ என் கண்ணில் மட்டும்பட்டிருந்தால்
பரவாயில்லை
உன் முதல் சந்திப்பு என்னை
சிந்தித்திருக்க வைத்திருக்காது..........
சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு
என் இதயத்தைத் தொட்டு
என் நெஞ்சில் நினைவையும்
சுமக்கவைத்துவிட்ட உன் பார்வை------
என் விழியினில் ஊர்ந்து சென்று
உள்ளத்தையும் அல்லவா தாக்கிவிட்டது
அந்த தாக்கத்தினால் ஏற்பட்ட புண்
என் இதயத்தில் இன்றும் வேதனையை
உண்டு பண்ணுகிறது
இந்த வேதனை சுககமாக இருந்தாலும்
சோகமான நினைவுகளை என்னுள்
தோற்றுவித்து தாகமான என் நெஞ்சில்
திடீரென்று இன்பமான தூறலை
தூவியது சோதனை தான்
உன் சந்திப்பினால் ஏனோ
உலகம் கூட எனக்கு அடக்கம்போல்
தான் தெரிகிறது
ஆனால் என் உள்ளம் அடங்காமல்
போனது தான் புரியவில்லை
என்னுள் துளிர்கின்ற இந்த
மொட்டான நினைவுகள் ஏனோ
மலரத் துடிக்கின்றது
காலம் அதற்கு குறுக்கே நிற்கிறது
உதட் டால் உணர்வுகளை உரைக்க
உள்ளம் தடுக்கிறது
மனதால் உன்னை நினைக்கமட்டும்
காதல் உதவுகிறது
எனக்குள் இருக்கும் உணர்வு உன்னிடம்
அது நீங்காத நினைவுகளாய் என்னிடம்
உறங்காத உளரல்களாய் என்
உறக்கத்தில் நின்றாடும் கண்ணிடம்
துடித்துக் கொண்டிருக்கும் என் நினைவுகளை
நீ பகிர்ந்து கொள்ள வருவாய்....
என நான் நினைக்கவில்லை
வந்தால் என் நினைவுகள் உன்னை சுமக்கும்
இல்லையேல் அந்த நினைவுகளை நான் சுமப்பேன்
கால ஏட்டில் எல்லா எழுத்துக்களையும்
எழுதி முடிக்கும் வேளை வரை
இந்த நினைவு ஏட்டை அடிக்கடித் திருப்புவேன்
சுகமான அந்த நினைவுகள்
என் மனதார வாசிக்கப்படும் உச்சரிப்புகள்
இரவின் ஒரு நாளில்
என் முடிவான வாழ் நாள் வரும் பொழுது
நான் சிந்திக்கும் அந்த சிந்தனை
உன் சந்திப்பின் பசுமையான
நினைவுகளையே அசை போடும்
பெண்ணே! இத்தனைக்கும் நான்
உன்னையன்று சந்திக்காமல் இருந்திருந்தால்
என் சலனமற்ற மனது
சாந்தமாய் இருந்திருக்கும்......................................

10.05.2007

மிருகம் சிரித்திருந்தால்

ஏதோ உலகத்தில் பிறந்து விட்டோம்
அதனாலே உறவை வளர்த்துவிட்டோம்
பாதம் மண்ணில் படியும் வரை
பறவைகள் போலே வாழக்கற்றோம்
தேடுதல் நிறைந்த வாழ்வினிலே
பாம்புகள் போலே ஊர்ந்திருக்கோம்
மாணிக்கம் கண்ணில் படும் வரையில்
பலரை நாமும் சீறவிட்டோம்
பட்டினி ஒன்றை நாம் மறந்தால்
வாழ்வில் வேதனை எதுவுமில்லை
படுக்கும் நாளை நினைத்தபடியே
பசியை நாமும் திர்த்திருக்கோம்
சின்னக் காகிதம் பெரிதாய் தெரிவதனால்
செல்வம் எதுவென மறந்துவிட்டோம்
புள்ளிக் கோலங்கள் போல் தான்
நம்வாழ்வும் நாளையும் வேறொன்று தோன்றிவிடும்
சிரிப்பதை ஒன்றே கற்றுவிட்டோம்
மிருக்கத்தில் இருந்து வேறுப்பட்டோம்
மிருகம் முன்னமே சிரித்திருந்தால்
இன்று இயற்க்கையை அழத்தான் விட்டிடுமா ?

மழலை


உன்னை முதன்முதலாய் தொட்டுத்

தூக்கையில் என்னுயிர்
மறுமுறை ஜணிக்கின்ற
வலியை உணர்ந்தேன் கண்ணே !
உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
தான் வலியே சுகமாய்
நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே!
அடிக்கடி நீ சிரிக்கும் பொழுது தான்
உள்ளம் அழகழகாய் மாறுதே!

நொடிக்கொருமுறை நீ அழுகையில் தான்
உயிரும் அதிர்வது போல் உள்ளதே!
படபடவென்று உன் கைகள் அசையத்தான்
கண்களில் உற்சாகம் பொங்குதே!
சரசரவென்று உன் உடல் நகர்ந்திடத்தான்
பூமியின் போக்கே மாறுதே!
மடிமீது நீ தவழ்ந்திடத்தான்
மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே!
எப்பொழுது உன் மழலை மொழி
கேட்பேன் என்னுயிர் துடிக்குதே!
என் ஒரு விரலும் நீ கடித்திடத்தான்
நரம்பினுள் அமிர்தம் பாயுதே!
சிலுசிலுவேன்று நீ நனைத்திடத்தான்
என்னாடையும் பல முறை ஏங்குதே!
சிணுங்காமல் உன்னைக் கொஞ்சிடத்தான்
என் ஒவ்வொரு அசைவும் முயலுதே!

10.02.2007

உணர்ச்சிகளுக்காக

நரை விழுந்த மனதில்
குறையொன்று கண்டேன்
குறை கண்ட மனதிலோ!
சிறையொன்றைக் கண்டேன்
சிறையான மனமோ!
தேய்வானது பிறையாய்
தூக்கத்தின் மத்தியில்
பிதற்றங்கள் பலவும்
அதன் தாக்கத்தின்விளைவாய்
சோர்வுகள் படரும்
பாழாகும் உயிரோ
மறந்ததையே நினைக்கும்
நோயாகும் உடலோ
துறந்தையே கேட்கும்
போகின்ற வரையிலும்
பூக்காத தெளிவு
சேர்கின்ற பொழுது தான்
தெளிவாக்கும் பூக்கள்
தேகத்தின் மடியில்
நினை கின்ற பொழுது
உயிர் தாகத்தின் தேடலை
யாரறிவாரோ!

9.28.2007

எண்ணிலா ஆசைகள்

காற்றில்வந்து காதில்
வீழ்ந்த முதல்சொல்லைப் பல்
முளைக்கும் சொல்லஆசைப்பட்டு
எண்ணிலா எண்ணம் வளர்த்தேன்
அந்த எண்ணத்தில் தான்
அம்மா! என்றுரைத்தேன்
பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம்
நண்பனாக்கி தூக்கத்திலும்
துள்ளி குதித்தேன்
துவண்டு விழுந்தாலும்
தூக்கிவிடும் அன்பை ரசித்தேன்………………
புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது
பல பக்கம் ரசித்தேன்………….
அந்த பக்கத்தில் பார்த்த
புது படத்தை ரசித்தேன்………
அழுது கொண்டு பள்ளிச்செல்லும்
நேரம் சனி ஞாயிற்ைறரசித்தேன்………………

இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று
பள்ளி நாட்களுக்கு துடித்தேன்
விண்மீன்களை எல்லாம் கைக்குள்
அடக்க வேண்டுமென
கல்லூரிக்குள்காலடி வைக்கும்
பொழுது நினைத்தேன்
காலடி பதிக்கும் முன்னரே
காதலின்அடியை அறிய ஆசைப்பட்டேன்
காதலியை காதலிக்க ஆசை
அவளும் நம்மை மட்டுமே காதலிக்க ஆசை
கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை
தேர்வில் காதல் அலீகளின் வெற்றியைப்பார்த்ததும்
காதலை விட்டு ஓட ஆசை
அன்பை விட்டு அழகுக்கு ஆசை
அழகும் அழிந்துவிடுமோ!
என்றெண்ணி புகழுக்கு ஆசை
புகழுக்காக தொடர்ந்த் படிப்பை
தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை
பார்வையில் பணம் பார்க்க ஆசை
பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை
காமத்திற்கு ஆசை – அதனோடு
கவுரவ த்திற்கு ஆசை
திருமணத்தோடு திருதிவிட்ட ஆசைகளை
எல்லாம்திருப்பிக் கொடுக்க ஆசை
நம் போல் ஒரு பிள்ளை
நமக்குப் பிறக்க ஆசை
நமக்காக துடிக்கும் ஓர்
உள்ளத்தை நண்பனாக்க ஆசை
நகம் நனைக்கும் வயதில்
நட்பை உதைத்த தோசம்
நரை வந்த பின்னும்
நண்பனைத் தேடும்ஒரு நேசம்
நேசத்தோடு பிள்ளைகளுடனே வசிக்க ஆசை
நிறைவேறாவிட்டால் தீரா நித்திரையில்
வீழ்ந்து விட ஆசை.........................

பிறக்க ஆசை

தாய் மடியில் அனுபவித்த முதல்
வலியைஅனுபவிக்க ஆசை
அந்த நினைவற்ற வலிகளுடனே
இருந்திருக்கக்கூடாதாஎன்றாசை
என் மேனி சிந்திய
முதல் ரத்தத்தைபார்க்காசை — அதுவே

நான் சிந்திய கடைசி ரத்தமாகி
இருக்கக்கூடாதா என்றாசை
பள்ளி சென்ற முதல் நாளை
எப்படியாவது வாங்க ஆசை
பக்குவப்படாமல் பள்ளிக்
குள்ளேயே இருந்துவிட ஆசை
பழகும் பொழுது
நல்ல நட்பிற்குஆசை
அந்த நட்பினிலும்
சிறந்த மனிதரைகாண ஆசை
பிரிந்திடினும் எனை
மறவா நண்பனுக்கு ஆசை
அந்த நண்பனிடமும்
எனக்குரிய உரிமைக்கு ஆசை
மறந்திடினும் ஒரு முறையாவது
காதலிக்க ஆசை
அந்த காதலிலும் எனக்குரியவளிடம்
ஊடலுக்குஆசை
ஒரு முறையாவது எனக்குரியவளை
தொட்டு விடஆசை
அந்தத் தொடு உணர்வும்
திருமணத்திற்கு பின்னிருக்கஆசை
பத்து மாதம் எனக்குரியவளின்

பாரம் சுமக்க ஆசை
ஈன்று எடுக்கும் பொழுது என்னவளுடன்
வலி தாங்க ஆசை
என்னால் தோன்றிய உயிரை
உன்னதமாக்க ஆசை
அந்த முயற்சியிலும் என்னவள்
உணர்வு கலக்க ஆசை
இருக்கும் வரைக்கும்
இன்பத்திற்கே ஆசை
இறக்கும் பொழுதும்
துன்பம்வராமலிருக்க ஆசை
கல்லறை யிலும் உறக்கமில்லா ஆசை
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை…………………………
……….

6.01.2007

கண்ணதாசன்





அன்புக்கோ இருவர் வேண்டும்அழுகைக்கோ ஒருவர் போதும் இன்பத்துக் கிருவர் வேண்டும் ஏக்கத்துக் கொருவர் போதும்.
------கண்ணதாசன்

என்னுடையது புயல்யாத்திரை.அவள் பூஜையறைக்குத்துவிளக்கு. அணைந்துபோகாமலிருப்பது எப்படிஎன்பதைச் சுடருக்குச்சொல்லிக்கொடுக்கவேண்டும்.

Vanam

Un Vizhi madalgal Thirakaiyilae
En manam engo ponadu karpanaitheriniley

5.22.2007

tholaiden

Tholai dooram Nee Chela
Virumbiyadal
Tholaindu Ponadu Nam
Kadal
Nee Nayagaravil Un
Kanavanodu
Nan Innum ingaye
Kanavukalodu

Popular Posts